பொலித்தீன் உட்கொண்டு உயிரிழக்கும் யானைகள்

அட்டாளைச்சேனையில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 12-10-2019 | 4:08 PM
Colombo (News 1st) அம்பாறை - அட்டாளைச்சேனை, கள்ளப்பாடு பகுதியில் மற்றுமொரு காட்டு யானை உயிரிழந்துள்ளது. கள்ளப்பாடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து பொலித்தீனை உட்கொண்டமையினால் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கள்ளப்பாடு பகுதியில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இதேவேளை, தம்புள்ளை - அலகொல ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் வீழ்ந்திருந்த யானைக்குட்டியொன்று காப்பாற்றப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்த தாய் யானையை விரட்டிய பின்னர் யானைக்குட்டி காப்பாற்றப்பட்டதாக சிகிரியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்