ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கான விமான சேவையில் தாமதம்

ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கான விமான சேவையில் தாமதம்

ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கான விமான சேவையில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2019 | 3:46 pm

Colombo (News 1st) ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கான விமான சேவைகளில் தாமதம் ஏற்படுமென ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சூறாவளி காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நரிடா விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் 7 மணித்தியாலங்கள் தாமதமடையும் என நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா கூறினார்.

இதனடிப்படையில், இன்றிரவு 7.15-க்கு பயணிக்கவிருந்த UL 460 விமானம் நாளை அதிகாலை 2.35-இற்கு தாமதமாகப் பயணிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் 0117 771 979 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களை www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியுமென ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்