எரித்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் எரித்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

by Staff Writer 11-10-2019 | 4:03 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - சந்திவெளி ஜீவபுரம் பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 3 நாட்கள் கடந்த சிசு ஒன்றே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிசு எரிக்கப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்திவௌி பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.