ஹோட்டல் மாடியிலிருந்து வீழ்ந்து வௌிநாட்டவர் பலி

கொழும்பின் பிரபல ஹோட்டல் மாடியிலிருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை உயிரிழப்பு

by Staff Writer 11-10-2019 | 3:35 PM
Colombo (News 1st) கொழும்பு - கொம்பனி வீதியில் உள்ள பிரபல ஹோட்டலொன்றின் மாடியிலிருந்து வீழ்ந்து வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த வௌிநாட்டுப் பிரஜை ஹோட்டலின் 33 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.