English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Oct, 2019 | 4:23 pm
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வாந்தி எடுத்ததாகவும் அதன் பின்னர் அவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், சந்தேகநபர் நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்றதன் பின்னர், சந்தேகநபரின் உடலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
துன்னாலை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவியால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 Jan, 2021 | 05:24 PM
12 Jan, 2021 | 06:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS