நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 10-10-2019 | 8:50 AM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றம் தென் மாகாணங்களிலும் வவுனியா, அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சில கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.