சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையே உடன்படிக்கை

சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

by Staff Writer 10-10-2019 | 6:53 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் இன்று (10) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோரும் பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ், உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலேயே, உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. இன்று கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் மேலும் சில உடன்படிக்கைகள் எட்டப்படவுளளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.