ஏப்ரல் தாக்குதல்: 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 10-10-2019 | 1:19 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் 64 பேரும் இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, எதிர்வரும் 24 ஆம் திகதிவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நுவரேலியாவில், தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினூடாக ஆயுதப்பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்