புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்கான கடமைகளை சற்றும் தளறாது நிறைவேற்றுவேன்: சஜித் பிரேமதாச

by Staff Writer 09-10-2019 | 9:05 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கல்கிசை ஶ்ரீ தர்மபாலாராமய விகாரைக்கு சென்றிருந்தார். இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரை சந்தித்து இதன்போது அவர் ஆசிபெற்றார். கல்கிசை ஶ்ரீ தர்மபாலாராம விகாரைக்கு சென்ற சஜித் பிரேமதாச வழிபாடுகளில் ஈடுபட்டார். சஜித் பிரேமதாசவின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளுக்காக மகா சங்கத்தினர் ஆசி வழங்கினர். இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்கான கடமைகளை சற்றும் தளறாது நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தார்.

ஏனைய செய்திகள்