by Bella Dalima 09-10-2019 | 5:06 PM
Colombo (News 1st) மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேருக்கு இரசாயனவியல் (வேதியியல்) துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
விஞ்ஞானிகள் ஸ்டான்லி விட்டிங்ஹாம் (Stanley Whittingham), ஜான் பி. குட்இனாஃப் (John B. Goodenough), அகிரா யோஷினோ (Akira Yoshino) ஆகியோர் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.