கோட்டாபயவின் தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்

அநுராதபுரத்தில் ஆரம்பமாகும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரம்

by Staff Writer 09-10-2019 | 7:39 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (09) ஆரம்பமாகவுள்ளன. அநுராதபுரம் - சல்காது விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிரசாரக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளதுடன், அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான கூட்டங்களை நடத்துதற்கும் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.