by Staff Writer 09-10-2019 | 7:46 AM
Colombo (News 1st) புத்தளம் முதல் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், அவதானமாக செயற்படுமாறு மீனவர்களுக்கும் கடற்சார் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மழை தொடர்பில் எச்சரிக்கை அறிக்கையை விடுத்துள்ள திணைக்களம், குறித்த கடற்பிராந்தியங்களின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை அதிகாரி கணப்பதிப்பிள்ளை சூரியகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.