ஹட்டனில் பாடசாலை பஸ் குடைசாய்ந்து விபத்து: 32 பேர் காயம்

by Staff Writer 08-10-2019 | 5:06 PM
Colombo (News 1st) ஹட்டன் - பொகவந்தலாவை, வனராஜா சந்தியில் பாடசாலை பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் - குடாகமவிலிருந்து பொகவந்தலாவை நோக்கிப் பயணித்த பாடசாலை பஸ் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 29 மாணவர்களும் 3 மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வனராஜா பிரதேசத்தில் நிலவும் சீரற்ற வானிலையினால் குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகளை அவதானமாகச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.