ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

by Staff Writer 08-10-2019 | 2:00 PM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுசெய்யப்பட்டபோதிலும், ரயில் போக்குவரத்து இதுவரை உரிய வகையில் வழமைக்குத் திரும்பவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட போதிலும், சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து இடம்பெறவில்லை என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ கூறுகின்றார். நாளை (09) காலை ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என தாம் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்