ப்ளூமெண்டல் சங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ப்ளூமெண்டல் சங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 08-10-2019 | 12:25 PM
Colombo (News 1st) பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ப்ளூமெண்டல் சங்க எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா டி நிரஞ்சனா சில்வா முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு களுபோலே என்றழைக்கப்படும் தினேஷ் எரங்க என்பவரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் ப்ளூமெண்டல் சங்கவிற்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.