கம்பஹாவின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 08-10-2019 | 6:54 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (08) காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வத்தளை, பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இந்தக் காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று காலை 8 மணி தொடக்கம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ரத்துபஸ்வல, இம்புல்பே ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் தெற்குக் கரை அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட செயற்றிட்டத்திற்காக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்