அதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம்

அதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம்

by Staff Writer 08-10-2019 | 8:34 AM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் அதுருகிரிய வௌியேறும் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் 6 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஹெரோயின் வியாபாரம் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் பிரதான ஹெரோயின் விற்பனையாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட 50 கிலோகிராம் ஹெரோயின் சந்தேகநபர்களினால் கடவத்தை பகுதியில் பெறப்பட்டு அத்துருகிரிய பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் தொலைபேசி இலக்கங்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த சொகுசு ஜீப் வண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொரளை மற்றும் நுகேகொட பகுதிகளைச் சேர்ந்த 38 வயதான இருவரே ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.