மத்திய மாகாணத்தில் மீன் வளர்ப்பு வேலைத்திட்டம் 

மத்திய மாகாணத்தில் மீன் வளர்ப்பு வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

by Staff Writer 07-10-2019 | 3:06 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் மீன் வளர்ப்பு வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண விவசாய அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் மத்திய தரத்திலான நீர்நிலைகளில் மீன்கள் வளர்க்கப்படவுள்ளன. பொதுமக்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்காக, குறைந்த விலையில் மீன்களை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.