வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் பலி

வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 06-10-2019 | 9:07 AM
Colombo (News 1st) ஹபரணை, புத்தளம் மற்றும் குடா ஓயா பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாதசாரிகள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை - தலபத்கந்த பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேநேரம், புத்தளம் - குருநாகல் வீதியின் மூன்றாம் மைல்கல் பகுதியில் பயணித்த மோட்டார்சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியுள்ளது. சம்பவத்தில் 67 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவளை, குடா ஓயா - தனமல்வில பகுதியில் பயணித்த வாகனமொன்று மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத வாகனமொன்று விபத்தை ஏற்படுத்தி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.