தாய்லாந்தில் நீழ்வீழ்ச்சியில் சிக்கி 6 யானைகள் பலி

தாய்லாந்தில் நீழ்வீழ்ச்சியில் சிக்கி 6 யானைகள் உயிரிழப்பு

by Staff Writer 06-10-2019 | 1:35 PM
Colombo (News 1st) தாய்லாந்தில் நீர்வீழ்ச்சியில் சிக்குண்டு 6 யானைகள் உயிரிழந்துள்ளன. நீர்வீழ்ச்சிக்குள் தவறிச்சென்ற நிலையில், ஒன்று மற்றையதைக் காப்பாற்றப்போய் அவை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தாய்லாந்தின் மத்திய பிராந்தியத்திலுள்ள ஹவோ யய் தேசிய பூங்காவிலுள்ள பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சிக்குள் குட்டியானை ஒன்று தவறி வீழ்ந்த நிலையில் அதனைக் காப்பாற்றச் சென்றே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் பாறை விழிம்புக்குள் சிக்கித் தத்தளித்த 2 யானைகளை தாய்லாந்து அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.