by Staff Writer 05-10-2019 | 9:31 PM
Colombo (News 1st) உலகக் கிண்ண ரக்பி தொடரில் முதல் அணியாக இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை, இன்று நடைபெற்ற ஏனைய போட்டிகளில் இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
உலகக் கிண்ண ரக்பி தொடர் ஜப்பானில் நடைபெறுவதுடன், D குழுவிற்கான ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவும் உருகுவேயும் மோதின.
போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்ட அவுஸ்திரேலிய அணி முதல் பகுதியில் 19 - 3 எனும் புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பகுதியில் அவுஸ்திரேலியா மேலும் 26 புள்ளிகளைக் கைப்பற்றியது.
உருகுவே அணியால் இரண்டாம் பகுதியில் மேலும் 7 புள்ளிகளையே பெற முடிந்தது.
போட்டியில் 45 -10 எனும் புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.