by Staff Writer 04-10-2019 | 3:41 PM
Colombo (News 1st) ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பயணப்பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.