சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு 

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

by Staff Writer 04-10-2019 | 3:49 PM
Colombo (News 1st) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 1,15,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 4 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.