ஈராக்கில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்:34 பேர் பலி

ஈராக்கில் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் 34 பேர் பலி; 1,518 பேர் படுகாயம்

by Bella Dalima 04-10-2019 | 4:30 PM
ஈராக்கில் மனித உரிமை மீறல், ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால், ஆர்பாட்டங்களின் போதான வன்முறைகள் காரணமாக 423 ஈராக் பாதுகாப்புப் படையினர் உட்பட 1,518 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு அரசு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.