நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 03-10-2019 | 5:59 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடனான மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடி, மின்னலால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.