சீரற்ற வானிலையால் தேயிலை உற்பத்தியில் தளம்பல்

சீரற்ற வானிலையால் தேயிலை உற்பத்தியில் தளம்பல்

by Staff Writer 03-10-2019 | 8:10 AM
Colombo (News 1st) சீரற்ற காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி மற்றும் வாராந்த ஏல விற்பனையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேயிலை ஏல விற்பனையில் மொத்தம் 66 50 023 கிலோகிராம் தேயிலை விற்பனையாகியுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சவுதி அரேபியா, குவைத், சிரியா, ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே தேயிலையினை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.