கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 03-10-2019 | 10:01 AM
Colombo (News 1st) எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல கோட்டாபய ராஜபக்ஸவுக்கு விசேட மேல் நீதிமன்றம் இன்று (03) அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ சிசிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு செல்வதற்காக கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி கோரியிருந்தார். நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் கடவுச்சீட்டை கையளிக்குமாறு இதன்போது நிரந்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும், சட்டமா அதிபர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நாடு திரும்பியதன் பின்னர் வௌிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாம் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு உத்தரவிட்டுள்ளது.