ஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா

ஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா

by Staff Writer 03-10-2019 | 10:14 AM
Colombo (News 1st) புதிய வகையான ஏவுகணை ஒன்று பரிசோதனை செய்யப்பட்டதை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பரிசோதனை, கடந்த மே மாதம் தொடக்கம் தாம் நடத்திய குறுந்தூர ஏவுக​ணைப் பரிசோதனைகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளதாகவும் வட கொரியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டில் வட கொரியாவினால் முன்னெடுக்கப்பட்ட 11ஆவது ஏவுகணைப் பரிசோதனையாக இது அமைந்துள்ளது. ஆனால், இந்தத் தடவை ஏவுகணையானது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.