விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை

விளம்பரப் பதாகைகளைக் காட்சிப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 02-10-2019 | 8:59 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்துவதற்காக டிஜிட்டல் விளம்பரப் பதாகைகளைக் காட்சிப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வீதியின் இரு மருங்கிலும் டிஜிட்டல் பதாகைகள் காட்சிப்படுத்தவுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஊடாகக் கூறியுள்ளது. இதனைத்தவிர, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொடர்பில் திரையரங்குகளில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகத் தேர்தல் சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.