தென் மாகாண இளையோருக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம்

தென் மாகாண இளையோருக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம்

by Staff Writer 02-10-2019 | 1:05 PM
Colombo (News 1st) தென் மாகாணத்திலுள்ள இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர் படையணியின் கீழ் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் இளைஞர், யுவதிகளுக்காக விவசாய முயற்சியாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. தொழில்நுட்ப அறிவு, விவசாய உற்பத்திகள், விவசாய உற்பத்திகளுடன் இணைந்த இடைக்கால உற்பத்திகள் தொடர்பில் இதன்போது இளைஞர், யுவதிகள் தௌிவூட்டப்படவுள்ளதாக தென் மாகாண விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.