by Staff Writer 02-10-2019 | 7:06 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிலர் நேற்றிரவு (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம், பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.