ஜனாதிபதியானால் சம்பளத்தை ஏழை மக்களுக்கு வழங்குவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 02-10-2019 | 8:18 PM
Colombo (News 1st) நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், தனக்குக் கிடைக்கும் கொடுப்பனவுகளையும் சம்பளத்தையும் நாட்டின் வறுமையை ஒழிப்பதற்காக மாதந்தோறும் தியாகம் செய்வதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். தனக்கான கொடுப்பனவுகளில் வறுமையை ஒழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து, அனைவருக்கும் முன்னுதாரணமான தலைமைத்துவத்தை வழங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்களின் துன்பத்தைக் கண்டும், வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் சுகபோகம் அனுபவிக்கும் யுகத்தை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இதனைக் கூறினார். இதன்போது, முன்னாள் அமைச்சர்களான அதாவுத செனவிரத்ன மற்றும் W.B.ஏக்கநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.