மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 01-10-2019 | 9:09 AM
Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வட மத்திய, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 - 100 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.