by Staff Writer 01-10-2019 | 12:51 PM
Colombo (News 1st)
Update: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராகப் பணியாற்றியவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.