தென் மாகாணத்தில் தேனி கட்டுப்பாட்டுத் திட்டம்

தென் மாகாணத்தில் தேனி கட்டுப்பாட்டுத் திட்டம்

by Staff Writer 01-10-2019 | 7:41 AM
Colombo (News 1st) தென் மாகாணத்தில் தேனிக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை விருத்திசெய்யும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்க தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தின் மெதகீம்பிய, பல்லிகொட, பட்டபொல, பதுரம்ப மற்றும் லபுதுவ உள்ளிட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. அவர்களுக்குத் தேவையான தேனிக் கூடுகள், பயிற்சி உபகரணங்கள், புகை விசிறும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.