English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Oct, 2019 | 7:57 am
Colombo (News 1st) அரச சேவையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
ரயில்வே திணைக்களத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று 6ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்களை சேர்ந்த ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் நேற்று 10 இற்கும் மேற்பட்ட அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது,
இதனிடையே, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பள முரண்பாடுகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
18 Mar, 2021 | 06:41 AM
25 Oct, 2020 | 05:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS