புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி

by Staff Writer 30-09-2019 | 3:15 PM
Colombo (News 1st) புலமைப்பரிசில் பரீட்சையில் மேலும் 5000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற 5000 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 15000 மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. தரம் ஆறில் இருந்து தரம் 13 வரை இந்தப் புலமைப்பரிசில் நிதி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.