எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி எச்சரிக்கை

எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி எச்சரிக்கை

by Staff Writer 30-09-2019 | 3:47 PM
Colombo (News 1st) ஈரானைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வராவிட்டால், யூகிக்க முடியாதளவு எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எண்ணிப்பார்க்க முடியாதளவு பாரிய தொகையில் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான யுத்தம் சர்வதேச பொருளாதாரத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார். CBS செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஊடகவியலாளர் ஜமால் கஷோஜியின் கொலை தொடர்பான சிறியளவிலான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் கொலைக்கான உத்தரவை தாம் பிறப்பிக்கவில்லை என அவர் அழுத்திக் கூறியுள்ளார்.