இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

by Staff Writer 30-09-2019 | 2:58 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று (30) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என்பதால் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலத்த மழையுடனான வானிலையால், நீர்மின் உற்பத்தி முன்னெடுக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 60.5 வீதமாக உயர்வடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாளாந்த மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்