அம்பாறையில் பெரும்போக நெற்செய்கை

அம்பாறையில் பெரும்போக நெற்செய்கை

by Staff Writer 30-09-2019 | 3:08 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் 1 20 000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தில் வருடாந்த ஏர்பூட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா இதனைத் தெரிவித்துள்ளார். சிறுபோகத்தில் விவசாயிகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த நிலையில், பெரும்போகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.