ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள்

ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள்

by Staff Writer 29-09-2019 | 8:04 AM
Colombo (News 1st) ஹபரணை - திகம்பதஹ - ஹிரிவடுன்ன வனப்பகுதியில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. உடலில் விஷம் கலந்தமையால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் 3 பெண் யானைகளின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹபரணை - திகம்பதஹ - ஹிரிவடுன்ன - தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் காலை கண்டுபிடிக்கப்பட்டன. பெண் யானைகள் இவ்வாறு உயிரிழந்தமை தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டாரவிடம் வினவியபோது, மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என தெரிவித்திருந்தார். இதேவேளை, சோதனைக்காக உடற்பாகங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் கூறினார். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தமது திணைக்களமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.