by Staff Writer 29-09-2019 | 7:25 AM
Colombo (News 1st) வத்தளை - நாயகந்த பகுதியிலுள்ள வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்றில் இன்று (29) அதிகாலை தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 5.45 மணியளவில் பரவிய தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.