சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 29-09-2019 | 6:23 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தமை தனிப்பட்ட ரீதியில் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு 02. பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வது தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மிலிந்த மொரகொட தெரிவிப்பு 03. அறுவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக முறைப்பாடு 04. கோட்டாபய ராஜபக்ஸ - ஜனாதிபதி இடையே சந்திப்பு 05. இரணைமடு குள வௌ்ள அனர்த்தம் தொடர்பான வௌ்ள அனர்த்த ஆரம்ப புலனாய்வு அறிக்கையின் மும்மொழிப் பிரதி 06. குடாவெல்ல பகுதியில் காணாமற்போன மீன்பிடிப் படகு தமது பொறுப்பிலுள்ளதாக மியன்மார் அறிவிப்பு 07. பாராளுமன்ற உறுப்பினர் S.B.நாவின்ன, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வௌிநாட்டுச் செய்திகள் 01. புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள்காட்டி ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரை 02. ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 16 பேர் காயம் விளையாட்டுச் செய்தி 01. வலியுடன் போராடி சாதித்த ஓட்டப்பந்தய வீரரான ஜெயக்காந்தன் குகேந்திர பிரசாத், தேசிய மட்டத்தை வெற்றிகொண்ட வீரரானார்.