by Staff Writer 29-09-2019 | 12:45 PM
Colombo (News 1st) அதிகளவிலான சவுதி அரேபியாவின் படையினரைப் பிடித்துவைத்துள்ளதாக ஹவூதி கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.
யேமன் - சவுதி எல்லைக்கருகில் இடம்பெற்ற பாரிய தாக்குதலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த குழு தெரிவித்துள்ளது.
சவுதியின் நஜ்ரான் நகருக்கருகில் 3 படையணிகள் தம்மிடம் சரணடைந்ததாக ஹவூதி கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான படைவீரர்கள் பிடிபட்டுள்ளதுடன் ஏனைய பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.