கோட்டாபய - ஜனாதிபதி சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த கலந்துரையாடல்

by Staff Writer 28-09-2019 | 8:19 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இன்று நண்பகல் 12.15 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த கலந்துரையாடல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். கோட்டாபய ராஜபக்ஸவுடன் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.