காணாமற்போன படகு மியன்மாரின் பொறுப்பில் உள்ளது

குடாவெல்ல துறைமுகப் பகுதியில் காணாமற்போன மீன்பிடிப் படகு மியன்மாரின் பொறுப்பில் உள்ளதாக அறிவிப்பு

by Staff Writer 28-09-2019 | 4:24 PM
Colombo (News 1st) குடாவெல்ல துறைமுகப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்று காணாமற்போன மீன்பிடிப் படகு தமது பொறுப்பிலுள்ளதாக மியன்மார் அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மியன்மார் நோக்கி சென்றுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மப்பிரிய திசேரா தெரிவித்தார். குறித்த படகு மீனவர்கள் ஐவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டு சென்றது. இதன் பின்னர் குறித்த படகு தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காததால், படகு தொடர்பில் தகவல் கிடைத்தால் அறிவிக்குமாறு வௌிவிவகார அமைச்சினூடாக இந்து சமுத்திரத்தின் அனைத்து நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டதாக பத்மப்பிரிய திசேரா தெரிவித்தார். படகுடன் மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வர துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.