கடற்பிராந்தியங்களில் கடும் மழை பெய்யும்

கடற்பிராந்தியங்களில் கடும் மழை பெய்யும்

by Staff Writer 28-09-2019 | 3:39 PM
Colombo (News 1st) தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் காணப்படும் வளிமண்டலவியல் இடையூறு காரணமாக மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.