இன்றிரவு சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்

இன்றிரவு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட பாராளுமன்ற குழு கூட்டம்

by Staff Writer 27-09-2019 | 4:07 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட பாராளுமன்ற குழு கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இரவு 8.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஶ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.