ஹிரிவட்டுன காட்டுப் பகுதியிலிருந்து 4 பெண் யானைகளின் உடல்கள் மீட்பு

by Staff Writer 27-09-2019 | 3:53 PM
Colombo (News 1st) ஹபரண - ஹிரிவட்டுன பகுதியில் நான்கு பெண் யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவகை நச்சு பதார்த்தம் உடலில் கலந்துள்ளமையால் யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திர பண்டாரநாயக்க குறிப்பிட்டார். ஹிரிவட்டுன காட்டின் நான்கு இடங்களில் இருந்து யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.