திருகோணமலையில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிப்பு

திருகோணமலையில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிப்பு

by Staff Writer 26-09-2019 | 2:23 PM
Colombo (News 1st) திருகோணமலை - சூடைக்குடா பகுதியில் ஒருதொகை வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே இந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சுமார் ஒரு கிலோகிராம் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.